ஜம்மு காஷ்மீர் : வீடு இடிந்து விழுந்து 3 சகோதரர்கள் பலி.!
three peoples died for home collapse in jammu kashmeer
ஜம்மு காஷ்மீர் : வீடு இடிந்து விழுந்து 3 சகோதரர்கள் பலி.!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கிஷ்த்வார் மாவட்டம் நாக்சேனி தாலுகாவில் உள்ள புல்லர் என்ற மலை குக்கிராமத்தில் நேற்று இரவு வீடு இடிந்து விழுந்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
![](https://img.seithipunal.com/media/crime 0223.png)
நீண்ட நேரத்திற்குப் பிறகும் மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. இதையடுத்து போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்தவர்கள் ராஜேஷ், சஜன் மற்றும் பாப்பு உள்ளிட்டோர் என்றும் அவர்கள் மூன்று பெரும் சகோதரர்கள் என்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்தனர்
English Summary
three peoples died for home collapse in jammu kashmeer