நள்ளிரவில் சோகம் - உ.பியில் மூன்று பேரின் உயிரை பறித்த லாரி! - Seithipunal
Seithipunal


மாணிக்பூரில் தன்னீர் கடையில் லாரி மோதி நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் இடவா மாவட்டத்தில் உள்ள மாணிக்பூர் என்ற இடத்தில் தேநீர் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையின் மீது நேற்று நள்ளிரவு லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். 

அந்தத் தகவலின் படி, போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததும், அந்த லாரி ஜார்க்கண்ட் பதிவெண் கொண்டதும் தெரிய வந்தது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples died accident in uttar pradesh


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->