தந்தையை டிராக்டர் ஏற்றி கொன்ற மகன்..! கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்...! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் கொடுத்த கடனை திருப்பி கேட்டு தந்தையை டிராக்டர் ஏற்றி மகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ள பெடாக் கிராமத்தை சேர்ந்தவர் தாஜி என்ற தாது கணபதி அகாலே(70). இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மகனுக்கு ரூபாய் 70 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார். இதையடுத்து தந்தை, மகனிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதனால் இவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மகன், தந்தை மீது டிராக்டரை ஏற்றி கொன்றுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த தாது கணபதி அகாலேவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தந்தையை டிராக்டர் ஏற்றிக்கொன்ற மகன் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The son killed his father with a tractor in Maharashtra


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->