டில்லி தற்கொலைப்படை தாக்குதலில் தொடர்புடைய மற்றுமொரு நபர் கைது; ராக்கெட் தயாரித்து தாக்குதல் நடத்த திட்டம்; என்ஐஏ விசாரணையில் அதிர்ச்சி தகவல்..! - Seithipunal
Seithipunal


தலைநகர் டில்லியில் செங்கோட்டை அருகே நிகழ்த்தப்பட்ட கார் வெடிகுண்டு தற்கொலைப்படை தாக்குதலில் மூலம் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தில் 03 பயங்கரவாதிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலை உமர் நபி என்ற டாக்டர் காரில் வெடிமருந்துகளை நிரப்பிச் சென்று தாக்குதலை நடத்தினான். இந்நிலையில், இந்த சம்வபத்தில் தொடர்புடைய மேலும் ஒருவனை என்ஐஏ கைது செய்துள்ளது. இவன் டிரோன்களை ராக்கெட் போல தயாரித்து தாக்குதல் நடத்த முயன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குண்டு வெடிப்பு சம்பவத்தில் டில்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், பலியானோர் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்கள் லுக்மான் (50), விநாயக் பாதக் ?(50) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர்-. விரைவில் அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.

டில்லி செங்கோட்டை தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் தொடர்பாக 'ஒயிட் காலர்' பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வந்த டாக்டர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த  தாக்குதலுக்கு கார் வாங்கிக் கொடுத்த முக்கிய நபரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த ஜசிர் பிலால் வானி என்பவனை என்ஐஏ அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். இவன், டிரோன்களை மாற்றம் செய்தும், ராக்கெட்டுகளை தயாரிக்க முயற்சி செய்தும், தொழில்நுட்ப ரீதியாக சதிகாரர்களுக்கு உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The NIA has arrested a person who was planning to make a rocket and carry out an attack


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->