மனைவியை கொடூரமாக கழுத்தறுத்து கொன்ற கணவர் தற்கொலை.! ஆந்திராவில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேச மாநிலத்தில் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சிம்மாதிரி(60). இவரது மனைவி உமா(45). திருமணமாகி 27 ஆண்டுகளான நிலையில், இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் சிம்மாதிரி, மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.

இதையடுத்து மீண்டும் கடந்த சனிக்கிழமை இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறுயடுத்து இருவரும் தூங்கச்சென்ற நிலையில், மனைவி மீது இருந்த ஆத்திரத்தில் சிம்மாதிரி தூங்காமல், உமா தூங்கியவுடன் சமையல் அறைக்கு சென்று அங்கிருந்து கத்தியை எடுத்து வந்து மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

பின்பு பக்கத்து அறைக்கு சென்ற சிம்மாதிரி அங்குள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து நீண்ட நேரம் சிம்மாதிரியின் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது உமா இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தும், மற்றொரு அறையில் சிம்மாதிரி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The husband commits suicide by brutally strangling his wife in Andhra


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->