பிரதமர் மோடியின் இல்லம் அருகே பறந்த ட்ரோன்? காவல்துறையினர் தீவிர விசாரணை! - Seithipunal
Seithipunal


உச்சக்கட்ட பாதுகாப்போடு இருக்கும் பிரதமர் மோடியின் இல்லம் அருகே டிரோன் பறந்ததாக எழுந்த புகார் குறித்து டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் லோக் கல்யாண் மார்க்கில் பிரதமர் மோடியின் இல்லம் உள்ளது. இந்நிலையில்  இன்று அதிகாலை 5 மணியளவில் பிரதமரின் இல்லம் அருகே டிரோன் பறந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக அதனை தேடும் பணியில் டெல்லி காவல்துறையினர் ஈடுபட்டனர்.

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துக்கு தொடர்புகொண்ட அதிகாரிகள், டிரோனோ அல்லது வேறு பறக்கும் விமானங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

டிரோன் பறந்ததாக தகவல் அளித்தது யார் என்பது குறித்து விசாரணையிலும் காவல்துறையினர் ஈடுபட்டனர்.  உச்சபட்ச பாதுகாப்பு உள்ள பிரதமரின் இல்லம் அருகே டிரோன் பறந்ததாக எழுந்த புகார் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The drone that flew near Prime Minister Modis residence Police serious investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->