புல்வாமா பகுதியில் துப்பாக்கிச்சூடு.! 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.!
Terrorist shooting in Pulwama
புல்வாமா பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்திலிருந்து இரண்டு ஏகே 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதை தொடர்ந்து பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Terrorist shooting in Pulwama