தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிஆர்பிஎஃப் பலி.. மற்றோரு வீரருக்கு தீவிர சிகிச்சை..! - Seithipunal
Seithipunal


தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை படித்ததிலிருந்து பல தீவிரவாத அமைப்புகள் தங்களின் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளன. காஷ்மீரில் தீவிரவாத இயக்கங்கள் பணிகளை தொடங்கியதால் அங்கு ராணுவம் துணை ராணுவம் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொழுது அவர்களை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் விட்டுவிட்டு அங்கிருந்து சென்றனர். இதில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர்.

 அருகில் இருந்த வீரர்கள் அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  மற்றவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பி ஓடிய தீவிரவாதிகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் இங்கு தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrorist attack in Kashmir CRPF soldier killed


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->