ஐயோ பாவம்! உத்திர பிரதேசத்தில் கோர விபத்து...! உடல் நசுங்கி 5 பேர் பலி...!
terrible accident in Uttar Pradesh 5 people died due to body crushing
உத்தரபிரதேசத்தில் கார்தொய் மாவட்டம் குசுமா என்ற கிராமத்தில் நேற்று 'நீரஜ்' என்பவருக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, உறவினர்கள் 11 பேர் கொண்ட குழு காரில் புறப்பட்டனர்.

இந்தக் கார் பதியம் என்ற கிராமத்தில் வந்தபோது, வளைவில் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து நேரிட்டது. இந்த கோர விபத்தில், காரில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
மேலும், 6 பேர் பலத்த படுகாயமடைந்தனர்.இந்தத் தகவலறிந்து விரைந்து வந்த காவலர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அவசர ஊர்தி மூலம் அருகிலுள்ள மருத்துவமனையிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து காவலர்கள் மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்செய்தி அப்பகுதியில் பெரும் சொகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
terrible accident in Uttar Pradesh 5 people died due to body crushing