குழந்தையில்லை என வரதட்சணை கேட்டு குடும்பத்தோடு கொடுமை.. வீடியோ வெளியிட்டு விபரீத முடிவெடுத்த பெண்மணி.!!
Telangana girl suicide attempt due to torture and dowry
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரை சார்ந்த பெண்மணி லாவண்யா லஹரி. இவரது கணவர் வெங்கடேஸ்வரா ராவ். வெங்கடேஸ்வரா ராவ் விமானியாக பணியாற்றி வருகிறார்.
லாவண்யா தனது கணவரின் குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், திருமணம் முடிந்து பல வருடங்கள் ஆகியும் தம்பதிக்கு குழந்தை இல்லை. மேலும், வெங்கடேஸ்வரா ராவும் மற்றொரு பெண்ணுடன் கள்ளக்காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், வெங்கடேஸ்வரா ராவின் தந்தை மற்றும் வெங்கடேஸ்வரராவின் சகோதரர் பெண்மையை அடித்து துன்புறுத்தியுள்ளனர். மேலும், வரதட்சணை தர கூறி கொடுமை செய்துள்ளனர்.
இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்த பெண்மணி, கடந்த ஜூன் 26 ஆம் தேதியன்று சமூக வலைதளத்தில் தற்கொலை வாக்குமூலம் கொடுத்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக குடும்பத்தினர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், வெங்கடேஸ்வரா ராவின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர். இதனை அறிந்த அனைவரும் தலைமறைவான நிலையில், இவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Telangana girl suicide attempt due to torture and dowry