ராகுல் காந்தியின் நடை பயணத்தில் இணைந்த முன்னாள் துணை முதல்வர்! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் முதல் மும்பை வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பீகார் மாநிலத்தில் நடை பயணம் மேற்கொள்கிறார். கடந்த சில நாட்களாக பீகாரில் நடை பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் இன்றுடன் மாநிலத்தில் நடை பயணம் முடிவடைகிறது. 

இதனை தொடர்ந்து ராகுல் காந்தி இன்று மாலை உத்தர பிரதேசம் செல்ல உள்ளார். இந்நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் இன்று காலை பீகார் மாநிலம் சசராமில் ராகுல் காந்தியை வரவேற்றார். 

பிறகு ராகுல் காந்தியை ஜீப்பில் அமர வைத்து தேஜஸ்வி ஓட்டினார். மேலும் ராகுல் காந்தி மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் பேச உள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் தேஜஸ் ஸ்ரீ யாதவ் பங்கேற்கவுள்ளார். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tejashwi Yadav joined Rahul Gandhi walk


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->