பீகார் || பள்ளி மாணவனுக்கு துப்பாக்கிச் சூடு - பீகாரில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் உள்ள சுபால் மாவட்டத்தில் செயின்ட் ஜோன் போர்டிங் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் துப்பாக்கியால் சுட்டதால் 10 வயது மாணவனின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. 

இதைபார்த்த சக மாணவர்கள் அலறி அடித்து ஓடினர். உடனே பள்ளி ஆசிரியர்கள் காயமடைந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தனியார் பள்ளி முதல்வரை கைது செய்துள்ளனர். மேலும், துப்பாக்கியால் சுட்ட மாணவன் மற்றும் அவரது தந்தையை தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

சிறுவனுடைய கையில் துப்பாக்கி எப்படி வந்தது? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக சுபால் மாவட்ட எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார். மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பைகளை சோதனையிட போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

student injured for gun shoot in bihar


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->