மது குடிப்பதை கண்டித்த தாய்.! மகன் எடுத்த விபரீதம் முடிவு.!
Son suicide in Puducherry
புதுச்சேரியில் மது குடிப்பதை தாய் கண்டித்ததால் மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
புதுச்சேரி பிச்சைவீரன்பேட் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மனைவி கம்சலா. இவர்களது மகன் கதிரவன் (26). கடந்து சில வருடங்களுக்கு முன்பு கருணாகரன் இறந்து விட்டதால் கம்சலா அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராக வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கருணாகரன் அவ்வப்போது சுமை தூக்கும் வேலை மற்றும் டைல்ஸ் வேலைக்கு சென்று வந்தார். மேலும் கதிரவனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் சம்பாதிக்கும் பணத்தை மது அருந்தி செலவழித்து வந்துள்ளார்.
இதனை அவரது தாய் கண்டித்து வந்த நிலையிலும் அதனை பொருட்படுத்தாமல் மது குடித்து வந்துள்ளார். இதையடுத்து கதிரவன் வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மீண்டும் அவரது தாய் கதிரவனை கண்டித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து வெளியே சென்ற கம்சலா, வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதிரவன் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதிரவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே கதிரவன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கம்சலா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Son suicide in Puducherry