பெற்றோரை கொன்றுவிட்டு காவல்துறைக்கு தகவல் அளித்த மகன்.. கேரளாவில் நிகழ்ந்த கொடூரம்..! - Seithipunal
Seithipunal


பெற்றோரை கொடூரமாக கொலை செய்த மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள வெள்ளை பகுதியை சேர்ந்தவர் இவருக்கு சந்திரிகா என்ற மனைவியும் அனீஷ் என்ற மகனும் உள்ளனர். சம்பவதன்று, தந்தைக்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த வைத்திருந்த  மண்வெட்டியால் பெற்றோரை சரமாரியாக தாக்கினார்.

இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் அளித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணைகள் அணிக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என தெரியவந்தது. மேலும் தலைமறைவாக உள்ள நிஷ காவல்துறையினர் தேடி வருகின்றனர். மகனே பெற்றோரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Son killed His Parents


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->