மது விருந்தில் பாம்பு விஷம்.! ஆஜரான பிக்பாஸ் பிரபலம்! நடந்தது என்ன?
Snake poison wine party Bigg Boss celebrity arrested
வட இந்தியாவைச் சேர்ந்த பிக்பாஸ் வெற்றியாளரும், யூடியூபருமான எல்விஷ் யாதவ் மது விருந்தில் பாம்பு விஷம் பயன்படுத்திய வழக்கில் காவல் நிலையத்தில் ஆஜரானார்.
உத்தர பிரதேசம், நொய்டாவில் ராவ் பார்ட்டி என்றழைக்கபடும் மது விருந்துகளில் பாம்பு விஷம் மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் வழங்கியதாக எல்விஷ் யாதவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நொய்டா காவல்துறை துணை ஆணையர் தெரிவித்திருப்பதாவது, யூடியூபர் மற்றும் பிக் பாஸ் வெற்றியாளர் எல்விஷ் யாதவ் பாம்பு விஷம் தொடர்பான வழக்கில் நாய்டா காவல் நிலையத்தில் நேற்று நள்ளிரவு ஆஜரானார் என தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து எல்விஷ் யாதவ் மீது உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே எல்விஷ் யாதவ் தனக்கு தொடர்பு இல்லை என வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், மேனகா காந்தியின் என்.ஜி.ஓ. அமைப்பு இந்த வழக்கை தொடர்ந்திருப்பதாக அறிந்தேன். கழுத்தில் நான் பாம்புகளுடன் சுற்றி திரிவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
அதெல்லாம் படப்பிடிப்பிற்காக மட்டும் தான். இந்த வழக்கில் எனக்கு 1 சதவீதம் தொடர்பு இருந்தால் கூட 10 ஆண்டுகள் அல்ல 100 ஆண்டுகள் தண்டனையாக இருந்தாலும் தானாக முன்வந்து சரணடைவேன் என தெரிவித்துள்ளார்.
எல்விஷ் யாதவ் பா.ஜ.க ஆதரவாளர் என்ற நிலையில் அந்த கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Snake poison wine party Bigg Boss celebrity arrested