ஹால் டிக்கெட்டை தின்ற ஆடு - மனஉளைச்சலில் 9 ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பசவ கல்யாண் கோகுல கிராமத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவரின் தேர்வு ஹால் டிக்கெட்டை ஆடு தின்றுள்ளது. இதனால் மனமுடைந்த மாணவி, பள்ளி தலைமை ஆசிரியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “நான் சாகப் போறேன். இதற்காக வருந்துகிறேன். எனது ஹால்டிக்கெட்டை ஆடு தின்று விட்டது” என்று எழுதி கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் தலைமறைவானார். இதற்கிடையே மாணவி காணாமல் போன தகவலறிந்த குடும்பத்தினரும், உறவினர்களும் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது உறவினர் வீட்டு கிணற்றில் இருந்து மாணவியின் அழுகை சத்தம் கேட்டது.

இதைக்கேட்ட மாணவியின் குடும்பத்தினர் உடனடியாக அங்கு சென்று மாணவியை கிணற்றில் இருந்து மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student sucide in karnataga for goat eat exam hall ticket


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->