#BigBreaking || ஹேமந்த் சூரனின் ஜாமீன் மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம்.!!
Sc refused hemant sioran bail petition
நிலம் மோசடி வழக்கில் சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சூரனுக்கு ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றம் ஒரு நாள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்ட நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர் நேற்று உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்ட அந்த மனு சிறப்பு நீதிமனற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம் எஸ் சுந்தரேஷ், பீலா திவாதி ஆகியோர் கொண்ட அமர்வின் முன்பு இன்று காலை 10:30 மணி அளவில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி சஞ்சீவ் கண்ணா உயர் நீதிமன்றத்தை நாடாமல் ஏன் உச்ச நீதிமன்றத்தை நாடினீர்கள் என என்ற கேள்விக்கு கைது செய்யப்பட்டது முதலமைச்சர் என்பதால் உச்ச நீதிமன்றத்தை நாடியதாக ஹேமன்சூரன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜாமீன் கோரி ஹேமன் சூரன் தரப்பு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததோடு ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தை நாடுமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
English Summary
Sc refused hemant sioran bail petition