சாதி கட்டமைப்பை ஒழிக்க வேண்டும்! - அர்.எஸ்.எஸ் பொதுச்செயலாளர்!! - Seithipunal
Seithipunal


குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே இந்தியாவில் யார் வேண்டுமானாலும் எந்த கோயிலுக்கும் செல்லலாம். தீண்டாமை பெயரால் சாதிய பாகுபாடுகளை நாம் சகித்துக் கொள்ளக்கூடாது என தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் சாதி ஒடுக்கு முறைகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என தெரிவித்த அவர் விளையாட்டு போட்டிகளில் இந்தியர்கள் சாதிக்கிறார்கள், அவர்களிடம் என்ன சாதி? என்ன மதம்? என்று கேட்பதில்லை.

சந்திராயன் 3 விண்வெளியில் வெற்றிகரமாக பாய்ந்தது. அப்போது விஞ்ஞானிகளின் சாதியா நாம் பார்த்தோம். இந்துக்களை பற்றி பேசுவதாலேயே ஆர்.எஸ்.எஸ்-ஐ மதவாத இயக்கம் என்கிறார்கள். சனாதன தர்மம் சடங்குகளை பற்றியது அல்ல வழிபாடும் முறைகளை பற்றியது என தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இந்தியாவின் சாதிய பாகுபாடு ஒழிப்பது குறித்து கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RSS General Secretary said Caste structure should be abolished


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->