திருவனந்தபுரம்: விமான இருக்கையிலிருந்து ரூ.1 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்.!
Rs 1 crore worth gold seized from flight seat in thiruvananthapuram
சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வந்த விமானத்தின் இருக்கையில் இருந்து ரூபாய் 1 கோடி மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு சார்ஜாவிலிருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய ரகசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து நேற்று அதிகாலை சார்ஜாவில் இருந்து வந்த ஏர் இந்திய விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் பயணிகளின் சோதனையில் எதுவும் சிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் விமானத்தில் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணி இருக்கையின் அடிப்பகுதியில் சிறு சிறு மணிகளாக தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருக்கையில் இருந்து ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான இரண்டு கிலோ 700 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் சோதனைக்கு பயந்து தங்கத்தை விமானத்திலேயே மறைத்து வைத்துவிட்டு சென்று இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விமானத்திலேயே தங்கத்தை மறைத்து வைத்துவிட்டு சென்ற பயணி குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Rs 1 crore worth gold seized from flight seat in thiruvananthapuram