மோடியின் மகளிடம் வேலையை காட்டிய திருடர்கள்.! - Seithipunal
Seithipunal


இந்திய பிரதமர் மோடியின் சகோதரர் மகளிடமிருந்து, சுமார் 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போன்களை இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள் இவர்களால் வழிப்பறி செய்திருக்கிறார்கள்.

பிரதமர் மோடியின் சகோதரர் மகளான தமயந்தி பென் மோடி, அமிர்தசரஸ் சென்று கொண்டிருந்த நிலையில் இன்று காலையில் டெல்லி வந்தார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற பிரபலங்களின் வீடுகள் இருக்கின் பகுதிக்கு பக்கத்திலுள்ள குஜராத்தி சமாஜ் பவன் ஓட்டலில் தங்குவதற்காக ரூம் எடுத்தார்.

இதை தொடர்ந்து, ஓட்டலின் வாசல் பகுதி அருகே அவர் சென்றபோது இருசக்கர வாகனத்தில் அவரைப் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவர், தமயந்தி பென் மோடி வைத்திருந்த பணப்பையை கண் இமைக்கும் நேரத்தில் பறித்துக்கொண்டு, அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

56 ஆயிரம் ரூபாய் பணம், இரண்டு செல்போன்கள் மற்றும் விமான பயணம் மேற்கொள்வதற்கான ஆவணங்கள் உள்ளிட்டவை அந்த பணப்பையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.

நடந்த இந்த வழிப்பறி குறித்து டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

robber theft money from modi daughter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->