பரபரப்பான சூழலில் "ஒரு நாடு; ஒரே தேர்தல்".. வெளியாகும் முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நாடு முழுவதும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரே கட்டமாக நடத்துவதற்காக ஒரு நாடு, ஒரு தேர்தல் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்டு அது குறித்தான  ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வில் பெறப்பட்ட கருத்துக்கள் மற்றும் நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்தான அறிக்கையை இன்று மத்திய அரசிடம் தாக்கல் செய்கிறது ராம்நாத் கோவிந்த் குழு.

மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இத்தகைய சூழலில் நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்தான அறிக்கையை ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு இன்று சமர்ப்பிக்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை தீர்த்தச் சட்டம் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒரே நாடு ஒரு தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 2029 ஆம் ஆண்டு மக்களவைப் பொதுத்தேளுடன் சட்டமன்ற பொது தேர்தல் முறை கட்டமாக நடத்த வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramnath govind committee report submit regards one nation one election


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->