தேசிய பூங்காவில் மின்சாரம் தாக்கி 2 குட்டிகளுடன் சிறுத்தை உயிரிழப்பு.!
Rajasthan National Park Leopard 2 cubs killed
ராஜஸ்தான், சரிஸ்கா தேசிய பூங்காவில் மின்சார கம்பி அறுந்து விழுந்து சிறுத்தை மற்றும் அதன் 2 குட்டிகள் உயிரிழந்ததாக மாவட்ட வன அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தின் அம்ரத்வாஸ் கிராமத்திற்கு அருகே உள்ள மலை தொடரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்து மாவட்ட வன அதிகாரி தெரிவித்திருப்பதாவது,
மின்சார கம்பி அறுந்து சிறுத்தை மற்றும் அதன் இரண்டு குட்டிகள் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே தாய் சிறுத்தை மற்றும் அதன் குட்டிகள் பரிதாபமாக உயிரிலிருந்து விட்டன.
உயிரிழந்த சிறுத்தைகளின் உடல்கள் மீட்க பட்டு மாவட்ட கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
English Summary
Rajasthan National Park Leopard 2 cubs killed