பேருந்திற்காக காத்திருந்த திருமணம் முடிந்த பெண்.. நால்வரால் துடிதுடிக்க அரங்கேறிய சோகம்..!!
Rajasthan girl sexual abuse by gang police investigation
இராஜஸ்தானில் உள்ள ரத்தங்கர் ராயல் மருத்துவமனைக்கு அருகாமையில், திருமணம் முடிந்த பெண்ணொருவர் நான்கு பேரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ரத்தங்கர் மருத்துவமனை இருக்கிறது. இந்த மருத்துவமனைக்கு அருகே திருமணம் முடிந்த பெண்மணி, கடந்த 19 ஆம் தேதியன்று தனது பெற்றோர்களின் இல்லத்திற்கு செல்ல பேருந்திற்காக காத்திருந்துள்ளார்.
இந்த சமயத்தில், அங்கு வந்த நான்கு பேர் கத்திமுனையில் பெண்ணை அங்குள்ள காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்தில் இருந்து அனைவரும் தப்பி சென்றுள்ளனர்.
முதலில் பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் இருந்த நிலையில், பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் முஷ்டாக், திர்லோக் நை, ராஜ்குமார் ஆகிய இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Rajasthan girl sexual abuse by gang police investigation