தாடி வைத்திருந்தால் கல்யாணம் கிடையாது...ராஜஸ்தான் கிராம பஞ்சாயாத்து முடிவு..! - Seithipunal
Seithipunal


தாடியை ஷேவ் செய்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்க முடியும் என கிராம பஞ்சாயத்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

வீட்டைகட்டி பாரு கல்யாணத்தை பண்ணி பாரு என சொல்லாடல் புழக்கத்தில் உள்ளது. சில கல்யாணத்தில் பல தடைகள் வரும் என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் மணமகனின் தாடி திருமணத்திற்கு தடையாக இருக்கும் என சொன்னால் நம்புவீர்களா? அப்படி ஒரு சுவாரசிய சம்பவம் நடந்தேறியுள்ளது.

ராஜஸ்தான் மாவட்டம், பாலி மாவட்டத்தில் உள்ளகுமாவத் சமூகத்தை சேர்ந்த 19 கிராம பஞ்சாயத்துகளில் திருமணத்தின் போது மணமகன் தாடி வைத்திருக்க கூடாது என பஞ்சாயத்து முடிவு செய்தனர்.அதே போல திருமணத்தின் போது DJ டான்ஸ், டெகொரேஷன்ஸ், ஆடம்பர உடைகள் வாங்குவது போன்றவற்றுக்கும் குமாவத் சமூகத்தினருக்கு  அந்த கிராம பஞ்சாயத்து தடை விதித்துள்ளது.

இதனைமீறினால் அபாரத்துடன் உரிய நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் இது அந்த கிராமத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் என தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajastan Pajayath Said There is no marriage if you have a beard


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->