ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் இந்திய பங்கு சந்தையில் மோசடி செய்து ரூ.4,843 கோடி லாபம்: மோடி அரசு யாருடைய விருப்பத்தின் பேரில் கண்களை மூடிக்கொண்டு இருந்தது..? ராகுல்காந்தி கேள்வி..! - Seithipunal
Seithipunal


ஜனவரி 2023 முதல் மே 2025 வரையிலான காலகட்டத்தில், ஜேன் ஸ்ட்ரீட் என்ற அமெரிக்க வர்த்தக நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் பங்குகள், ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) சந்தைகளில் ஒரே நேரத்தில் பந்தயம் கட்டி, குறியீடுகளை கையாண்டு லாபம் ஈட்டியதாக பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி கண்டறிந்துள்ளது.

இதனால், ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் இந்திய சந்தையில் வர்த்தகம் செய்யத் தடை விதிக்கப்பட்டு, ரூ.4,843 கோடி லாபம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பதிவிட்டுள்ளதாவது: செபி இவ்வளவு காலம் ஏன் அமைதியாக இருந்தது..? மோடி அரசு யாருடைய விருப்பத்தின் பேரில் கண்களை மூடிக்கொண்டு இருந்தது..?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) சந்தை பெரிய முதலீட்டாளர்களுக்கு ஒரு விளையாட்டு மைதானமாக மாறிவிட்டது. இதனால், சிறிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பணத்தை இழந்து வருவதாகவும் 2024-ஆம் ஆண்டிலேயே தான் குறிப்பிட்டிருந்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi asks why the Modi government turned a blind eye when Jane Street was found to have defrauded the Indian stock market and made a profit of Rs 4843 crore


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->