பாஜக எனது அடையாளம், பதவியை எடுத்துக்கொண்டாலும் நான் மக்களுக்காக பாடுபடுவேன் - ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு.!
ragul gandhi rally in kerala vayanadu
பாஜக எனது அடையாளம், பதவியை எடுத்துக்கொண்டாலும் நான் மக்களுக்காக பாடுபடுவேன் - ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு.!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிவு செய்து இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி இன்று தனது முன்னாள் தொகுதியான கேரளாவில் உள்ள வயநாட்டில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினார். அதில் கலந்துகொண்ட பின்னர் மக்களை சந்தித்தார். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:-
"எம்பி என்பது வெறும் பதவி மட்டும் தான். பாஜக எனது அடையாளம், பதவி, வீடு உள்ளிட்ட அனைத்தையும் எடுத்துக் கொள்ளலாம். என்னை சிறையில் கூட அடைக்கலாம். ஆனால், வயநாட்டு மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதை அவர்களால் தடுக்க முடியாது.
நான் ஒருபோதும் பாஜகவுக்கு பயப்பட மாட்டேன். நாட்டில் எனக்கு எதிராக எது நடந்தாலும், நான் நானாக தான் இருப்பேன். என்னுடைய பதவி மற்றும் வீட்டை எடுத்துக் கொண்டாலும், சிறையில் அடைத்தாலும், வயநாடு மக்களுக்காக போராடுவேன்.
நாட்டில் எத்தனையோ பேர் வீடு இல்லாமல் உள்ளார்கள். அவர்களில் ஒருவனாக நானும் உங்களுக்காக உழைப்பேன். என்னை ஒருபோதும் முடக்க முடியாது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
ragul gandhi rally in kerala vayanadu