தெலுங்கானா, புதுச்சேரிக்கு புதிய ஆளுநர்.. குடியரசுத் தலைவர் உத்தரவு.!!
radhakrishnan additionally appointed as Telangana puducherry governor
தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கு நேற்று கடிதம் எழுதி இருந்தார்.
மீண்டும் தேர்தல் அரசியலில் களமிறங்க திட்டமிட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜன் குடியரசு தலைவருக்கு அனுப்பிய கடிதத்தை ஏற்றுக் கொண்டதை அடுத்து தற்போது தெலுங்கானா மற்றும் புதுச்சேரிக்கு புதிய பொறுப்பு ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி ஜார்க்கண்ட் ஆளுநராக உள்ள சிபி ராதாகிருஷ்ணன் மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரை கூடுதலாக புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநிலத்தை கவனிப்பார் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார்.
English Summary
radhakrishnan additionally appointed as Telangana puducherry governor