#Breaking: ஜம்மு- காஷ்மீரில் பயங்கர துப்பாக்கி சூடு.! பயங்கரவாதிகள் சுட்டு கொலை.!
puluwama attack in jammu kashmir
இன்று பாதுகாப்புப் படையினர் ஜம்மு- காஷ்மீரில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரு பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் இருக்கும் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் ஆபரேஷன் தோஷ் கலன் எனும் பெயரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அந்த தேடுதல் வேட்டையின் பொழுது பயங்கரவாதிக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த துப்பாக்கி சூட்டில் இரு பயங்கரவாதிகள் இந்திய பாதுகாப்புப்படையினரால் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.
அத்துடன், அப்பகுதியில் இருந்து நிறைய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக அப்பகுதியில் மிகவும் பரபரப்பான சூழல் நிலவியது.
English Summary
puluwama attack in jammu kashmir