3..2..1.. கவுண்ட்டவுன் ஸ்டார்ட்.! பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் குறித்து இஸ்ரோவின் அதிகாரபூர்வ தகவல்..! - Seithipunal
Seithipunal


பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் உட்பட பி.எஸ்.எல்.வி.சி.-48 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட இருக்கிறது. இந்த நிலையில், இதற்கான கவுண்ட்டவுன் இன்று தொடங்க இருக்கிறது. 

பூமியை கண்காணிப்பதற்காக ரீசாட் -2பிஆர்1 என்னும் செயற்கைக்கோளை இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த செயற்கைக்கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் நாளை மாலை 3.25 மணிக்கு ஏவப்பட இருக்கிறது. இதற்கான கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது.

ரீசாட் -2பிஆர்1 செயற்கைக்கோளுடன் இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு செயற்கைக்கோள், அமெரிக்காவின் 6 செயற்கைக்கோள்கள்  என்று வணிக ரீதியிலான 9 செயற்கைக்கோள்கள் அனுப்பப்படுகிறது. பி.எஸ்.எல்.வி.சி.-48 ராக்கெட் விண்ணில் ஏவுவதை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதாகவும், இதற்கான இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்  என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pslv c-48 launch tomorrow by isro


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->