பிரதமரின் பாதுகாப்புப் படை இயக்குநர் மரணம்!  - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவின் இயக்குனர் அருண்குமார் சின்ஹா (வயது 61) உடல் நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்தார். 

சிறப்பு பாதுகாப்பு படையின் இயக்குனராக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருபவர் அருண்குமார். 1987 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியான இவருக்கு கடந்த ஆண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. 

இந்நிலையில் ஹரியானா குருகிராமில் உள்ள மருத்துவமனையில் இவருக்கு கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

அருண்குமார் முன்னதாக கேரள மாநிலத்தில் பல்வேறு பதவிகள் வகித்து உள்துறை, எல்லை பாதுகாப்பு படை உள்ளிட்ட மத்திய துறைகளிலும் தொடர்ந்து பணியாற்றியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime Minister security force director died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->