திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர்!
Prime Minister darshan Sami Tirupathi Esumalayan Temple
தெலுங்கானா, தேர்தல் பிரசாரத்தை நேற்று முடிந்து விட்டு பிரதமர் நரேந்திர மோடி ஆந்திரா சென்றார். இவரை ஆளுநர் அப்துல் நசீர், முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலை சென்ற பிரதமர் நரேந்திர மோடியை விருந்தினர் மாளிகை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர், நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.
இதனை அடுத்து இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு ரேணிகுண்டா விமான நிலையம் திருப்பதி கோயில் போன்ற இடங்களில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் சுமார் 3000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Prime Minister darshan Sami Tirupathi Esumalayan Temple