பிரதமருக்கும் முதல்வருக்கும் கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேச முதல்வருக்கும் பிரதமர் மோடிக்கும் கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தாவூத் இப்ராகிமின் கும்பல் தனக்கு கொலை மிரட்டல் விடுக்க சொன்னதாக நேற்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். 

விசாரணையில் கைது செய்யப்பட்டவர் மும்பை கிழக்கு சியோனில் வசிக்கும் கம்ரான் அமீர்கான் (வயது 21) என்பது தெரிய வந்துள்ளது. 

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் மும்பை ஜே.ஜே. மருத்துவமனையில் இருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டியுள்ளார். 

இந்நிலையில் பிடிபட்ட கம்ரான் அமீர்கான் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் இதற்கு முன்பு உத்தரப்பிரதேச முதல்வருக்கு கொலை மிரட்டல் விதிப்பதற்காக மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime Minister and Chief Minister kill threatened person arrested


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->