ம.பியில் சோகம் || சமரசம் செய்ய சென்ற கர்ப்பிணி பெண் - காத்திருந்த பேரதிர்ச்சி.!
pregnent woman harassment and murder in madhya pradesh
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொரேனா மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரின் கணவர் பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், கர்ப்பிணி பெண் தனது கணவர் மீது குற்றம் சுமத்திய பெண்ணிடம் சமரசம் பேசுவதற்காக சந்த்கா புரா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த வீட்டில், ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்கள் என்று மொத்தம் நான்கு பேர் இருந்துள்ளனர். அதில் அந்த மூன்று ஆண்களும் கர்ப்பிணி பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அந்த பெண்ணின் மீது தீயை பற்றவைத்து எரித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்து கர்ப்பிணி பெண்ணை மீட்டு குவாலியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர், மாஜிஸ்திரேட் முன்னிலையில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் குறித்து வாக்குமூலம் அளித்தார். இதைத் தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
pregnent woman harassment and murder in madhya pradesh