புதுமாப்பிள்ளைக்கு அரங்கேறிய சோகம்.. 4 மாதத்தில் விபரீதம்.!! - Seithipunal
Seithipunal


பாண்டிச்சேரி மாநிலத்தில் திருநள்ளாறு கீழசுப்ராயபுரம் என்ற கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் என்பவருடைய மகன் இளம்பூரணம் (31) அதே பகுதியில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நான்கு மாதத்திற்கு முன்பாக ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. 

பாமா என்ற அந்தப் பெண் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு வாடகை வீடு எடுத்து இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக மனமுடைந்த இளம் பூரணம் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி இருக்கின்றார். இதனால், மிகுந்த கவலையுடன் காணப்பட்ட பாமா தன்னுடைய உறவினர்களிடம் இது குறித்து தெரிவித்தார். பல இடங்களில் அவர்கள் தேடி அலைந்தும் அவரை மீட்க முடியவில்லை. 

இந்நிலையில், நேற்று காலை அப்பகுதியில் உள்ள ஆலமரத்தில் அவர் தூக்கில் தூங்குவதாக தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஓடிச் சென்று அங்கே பார்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து தூக்கில் தொங்கிய சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக புதிதாக திருமணமான மாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்டது, உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pondicherry new married man attempt suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->