கல்யாண வீட்டில் சூடான பிரியாணி கேட்டவருக்கு, மாப்பிள்ளையின் தந்தை ஆதரவாளர்களால் கத்திக்குத்து.!
Pondicherry Marriage Function Man Murder Attempt want Hot Biryani
வில்லியனூர் பகுதியில் நடைபெற்ற திருமண வரவேற்பு பிரியாணி கேட்டவருக்கு கத்திவிட்டு விழுந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
சென்னையை சார்ந்தவர் சிவகுமார் (வயது 40). இவர் கடந்த 5 ஆம் தேதி வில்லியனூர் கோட்டைமேடு அருகே நடந்த உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அவர் சாப்பிடுவதற்காக அமருகையில், ஆட்டுக்கறி பிரியாணி பரிமாறப்பட்டுள்ளது.
இதன்போது, பிரியாணி சூடாக இல்லை. இதனால் பிரியாணி சூடாக இருந்தால் கொண்டு வாருங்கள் என்று கூறியுள்ளார். இதன்போது, மாப்பிள்ளையின் தந்தை சந்திசேகர், அனைவருக்கும் இதே பிரியாணி தான். உனக்கு சிறப்பாக கொண்டு வரமுடியாது என்று கூறியுள்ளார்.
மேலும், சிவகுமாரின் கன்னத்தில் அரைந்திருக்கிறார். கல்யாண வீடு தகராறு வீடாக மாறவே, சிவகுமாரை சேகரின் ஆதரவாளர்கள் 2 பேர் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சிவகுமாரை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர்.
தற்போது மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனையில் சிவகுமார் அனுமதியாகியுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள வில்லியனூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Pondicherry Marriage Function Man Murder Attempt want Hot Biryani