எதிர்வீட்டு கள்ளக்காதலியை குழந்தையுடன் தள்ளிச்சென்ற சோகம்.. கண்ணீரில் ஒரிஜினல் கணவன்.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள குண்டுபாளையம் மாரியம்மன் கோவில் பகுதியை சார்ந்தவர் முருகன் (வயது 31). இவர் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜகுமாரி (வயது 27). இவர்கள் இருவருக்கும் கவுசிக் என்ற 6 வயது மகனும், கோவர்ஷினி என்ற 2 வயது மகளும் உள்ளனர். 

இவரது வீட்டின் எதிர்புறம் உள்ள வீட்டில் வசித்து வருபவர் பழனிராஜ். இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து, அவருடன் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், பழனிராஜுக்கும் - ராஜகுமாரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனை அறிந்த முருகன் இருவரையும் கண்டிக்கவே, சம்பவத்தன்று காலை நேரத்தில் கவுசிக் மட்டும் வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளான். ராஜகுமாரி மற்றும் கோவர்ஷினியை காணவில்லை. 

இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரில், மனைவி ராஜகுமாரி மற்றும் குழந்தையை பழனிராஜ் கடத்தி சென்றுள்ளதாக புகாரில் தெரிவிக்கவே, இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pondicherry Illegal affair Couple Escaped Police Investigation 23 Jan 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->