கேரளா : பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர் கைது.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரரை கைது செய்தனர்.

கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராஜ் (36). இவர் திருச்சூர் அருகே ராமவர்மபுரம் போலீஸ் முகாமில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு காசர்கோட்டை சேர்ந்து 32 வயது பெண் ஒருவர் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணுடன் அடிக்கடி பேசி வந்த ஸ்ரீராஜ், காதலிப்பதாகவும், உன்னை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி வீடியோ காலிலும் பேசி வந்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீராஜ் அந்தப் பெண்ணிடம் நேரில் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் அந்தப் பெண் நேரில் பார்க்க வந்தபோது, உன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஹோட்டலில் அறையில் எடுத்து அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து அந்தப் பெண்ணை ஸ்ரீராம் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஸ்ரீராஜை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Policeman arrested for raping woman in kerala


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->