கேரளா || கனமழையால் தலைகவிழ்ந்த காவல்துறை வாகனம்..!
Police Van Accident In Kerala
கனமழையால் காவல்துறை வாகனம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கேரளாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு அகளி டிஎஸ்பி முரளிதரன் மற்றும் அவரது ஓட்டுநர் காவல்துறை வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
கனமழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி நின்றதால் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் தலைகீழாக கவிழ்ந்தது. அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து ஏற்பட்ட பகுதி அடிக்கடி வாகன விபத்து ஆகும் பகுதி எனவும் கனமழை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
English Summary
Police Van Accident In Kerala