#BigBreaking :: அச்சச்சோ... பிரதமர் மோடியின் குடும்பத்திற்கு என்ன ஆச்சு..!! 6 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தின் மைசூரின் இருந்து சாமராஜநகர் பந்திப்பூர் வனவியல் பூங்காவுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி மற்றும் அவரது மனைவி, மகன், மருமகள், பேரக்குழந்தைகள் என 6 பேர் சென்றுள்ளனர். மைசூர் சாலையில் வேகமாகச் சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவர் மீது மோதியதில் பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் காயம் அடைந்துள்ளனர்.

மைசூர் புறநகர் பகுதியான கட்கொல்லா அருகே இன்று மதியம் 1.30 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளது. பிரஹலாத் மோடி மற்றும் அவருடன் வந்த அவரது மகன் மெகுல் மோடி, மருமகள், பேரன் மேனத் மெகுல் மோடி மற்றும் அவர்களது ஓட்டுநர் சத்தியநாராயணன் ஆகியோர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மைசூர் JSS மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மைசூர் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modis brothers car met an accident in Karnataka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->