உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் அர்ஜென்டினா.. பிரதமர் மோடி வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


2022 பிஃபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியானது கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்றனர். 

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாக் அவுட், காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளின் முடிவில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 18ம்) இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் மோதின. இதில், நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியும், உலகின் தலைசிறந்த அணியான அர்ஜென்டினா அணியும் இறுதிப் போட்டியில் மோதுவதால் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இந்த இறுதி போட்டியை காண ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அப்போது ஆட்டத்தின் 90 நிமிடங்கள் முடிவில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் முடிவிலும் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் நீடித்தது. அதன் பின்னர் பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது.

அதில், 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை அர்ஜென்டினா வீழ்த்தி, உலக கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இதையடுத்து, உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள், பிரபலங்களை, ரசிகர்கள் என்று அனைவரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி உலகக் கோப்பை கால்பந்து தொடரை வென்ற அர்ஜென்டினா அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் 'இந்த போட்டி மிகவும் பரபரப்பான கால்பந்து போட்டிகளில் ஒன்றாகும் நினைவில் கூறக் கூடியவை. அர்ஜென்டினா மற்றும் மெஸ்சியின் லட்சக்கணக்கான இந்திய ரசிகர்கள், இந்த வெற்றியில் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரான்ஸ் அணி தங்கள் திறன் மற்றும் விளையாட்டு திறமையால் ரசிகர்களை மகிழ்வித்ததாக பிரதமர் மோடி' பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi wishes to football world cup champion Argentina


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->