மின்வேலியில் சிக்கிய காட்டு யானை.! உரிய நேரத்தில் காப்பாற்றிய பந்திப்பூர் வனத்துறையினருக்கு பிரதமர் பாராட்டு.!
PM Modi praised the forest department of Bandipur for rescuing the wild elephant trapped in the electric fence
கர்நாடகா மாநிலத்தில் மின்வேலியில் சிக்கி உயிருக்கு போராடிய காட்டு யானையை உரிய நேரத்தில் காப்பாற்றிய பந்திப்பூர் வனத்துறையினருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஓம்காரா வனப்பகுதிக்கு அருகே விவசாயி ஒருவர் காட்டு யானைகளுடன் இருந்து பயிரை காப்பாற்ற தனது தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்திருந்தார். இந்நிலையில் காட்டு யானை ஒன்று விவசாயின் தோட்டத்திற்குள் செல்ல முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பந்திப்பூர் வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் வரவழைத்து உயிருக்கு போராடிய காட்டு யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சுமார் 10 மணி நேரம் சிகிச்சைக்கு பிறகு காட்டி யானை உயிர் பிழைத்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் காட்டுயானைக்கு ஊட்டச்சத்து உணவுகளை வழங்கி யானை வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய காட்டு யானையை உரிய நேரத்தில் காப்பாற்றிய பந்திப்பூர் வனத்துறையினரையும், மருத்துவக் குழுவினரையும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 'இதனைக் கொண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும் பந்திப்பூர் புலிகள் காப்பக ஊழியர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும், நம்முடைய மக்கள் இத்தகையை பதிவு காட்டுவது உண்மையிலேயே பாராட்டுகுறியது' என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் அவர்களும் வனத்துறையினரை பாராட்டியுள்ளார்.
English Summary
PM Modi praised the forest department of Bandipur for rescuing the wild elephant trapped in the electric fence