சர்வதேச விமான போக்குவரத்து துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்..!
PM Modi is proud that India plays a major role in the international aviation sector
சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் சார்பில், ஆண்டு விழாக் கூட்டம் புதுடில்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, சர்வதேச விமான போக்குவரத்து துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக பெருமிதமாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உலக விமான போக்குவரத்து துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. பூமியில் நகரங்களுக்கு மத்தியிலான பகுதிகளில் மட்டும் நமது பயணம் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் அங்கு பேசுகையில், விண்வெளிக்கு பயணம் என்பதை வணிகமயமாக்கி அதை மனிதர்கள் பயணிக்கும் வண்ணம் மாற்ற வேண்டும் என்ற கனவில் மனிதர்கள் இருக்கின்றனர். அனால், அதற்கு இன்னும் சிறிதுகாலம் இருக்கிறது என்பது உண்மையே என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த மாற்றம், புதுமைக்கான ஒரு பெரிய மாற்றமாகவும், விமான போக்குவரத்து எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதையே காட்டுகிறதாகவும், அதை கட்டமைப்பதற்கான மூன்று வலுவான அம்சங்கள் நம்மிடம் உள்ளன என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, முதலாவதாக அதற்கான சந்தையும், மனிதவளமும் புதுமையை படைக்க விரும்பும் திறமையான மக்களும் உள்ளனர் என்றும், செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், எரிசக்தி துறைகளில் புதிய சகாப்தங்களை கண்டுபிடிப்பவர்களாக உள்ளனர் என்றும், மூன்றாவதாக தொழில்துறைக்கான கொள்கை உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த 03 திறன்களின் அடிப்படையில் நாட்டின் விமான போக்குவரத்து துறையை வேறு ஒரு புதிய உச்சத்துககு கொண்டு செல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி அங்கு குறிப்பிட்டுள்ளார்.
English Summary
PM Modi is proud that India plays a major role in the international aviation sector