பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் சிக்கிய இந்திய வீரர்: மருத்துவமனையில் சிகிச்சை! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லை பாதுகாப்பு வீரர் ஒருவர் நேற்றிரவு படுகாயம் அடைந்தார். 

ஜம்மு-காஷ்மீர் ராம்கர் சர்வதேச எல்லையில் வழக்கம்போல் பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது திடீரென பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இந்திய எல்லைப்படை வீரர் குண்டு பாய்ந்து காயமடைந்தார். 

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய எல்லை படை வீரர்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலின் காரணமாக ராம்கர் பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 

இதற்கிடையே ஜம்மு-காஷ்மீர் பகுதியில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் இன்று காலை பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan military attack Indian soldier


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->