காங்கிரஸ் கட்சியை முடக்க 'சதி' - ப.சிதம்பரம் பரபரப்பு குற்றசாட்டு.!
p Chidambaram says conspiracy destroy congress
கடந்த 2017-18 முதல் 2020-21 வரையிலான மதிப்பீடு மற்றும் அபராதம் வட்டி போன்றவை தொடர்பாக ரூ. 1823 கோடி கட்ட காங்கிரசுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்திருப்பதாவது, அரசியல் கட்சிகளின் வருமானத்திற்கு வரி கிடையாது என்பதே நடைமுறை.
8 ஆண்டுகளாக நோட்டீஸ் கொடுக்காமல் தேர்தல் நேரத்தில் கொடுப்பது ஏன். 139 ஆண்டுகால பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சியை முடக்க சதி நடக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு முன்னதாக காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ், இந்த நோட்டீஸ் நிதி ரீதியில் எங்களை முடக்குவதற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது வரி தீவிரவாதம். காங்கிரஸ் கட்சியை தாக்குவதற்காக இதனை பயன்படுத்துகின்றனர். இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என விமர்சித்துள்ளார்.
English Summary
p Chidambaram says conspiracy destroy congress