சத்தீஸ்கர்: நக்சலைட்டு வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலி.! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கேரில் நக்சலைட்டு வெடிகுண்டு தாக்குதலில் கிராமவாசி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சத்தீஸ்கரின் கன்கேர் மாவட்டத்தில் கோரார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பைன்ஸ்கான் கிராமத்திற்கு அருகே, இரண்டு பேர் நேற்று காலை சென்றபோது திடீரென நக்சலைட்டுகள் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியுள்ளது. இந்த வெடிகுண்டு விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயமடைந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பாதுகாப்பு படையினர், காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர் பிரேஷ் மாண்டவி(27) என்றும், காயமடைந்தவர் கிலேஷ் கோர்ரம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் ஷலப் சின்ஹா தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர், நக்சலைட்டுகளை கண்டுபிடிக்க அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One killed in Naxalite bomb attack in Chhattisgarh


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->