இன்று ஒரு நாள் தாஜ்மஹாலுக்குள் நுழைய அனுமதி இலவசம்.! ஏன் தெரியுமா.? - Seithipunal
Seithipunal


உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு இன்று ஒருநாள் தாஜ்மஹாலுக்குள் நுழைய அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் புதுடெல்லி அருகேயுள்ள ஆக்ரா நகரில் யமுனை ஆற்றங்கரையில் காதலின் நினைவுச்சின்னமாக போற்றப்படும் தாஜ் மஹால் உள்ளது. இது முகலாய மன்னர் ஷாஜகானால், இறந்து போன அவனது மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது.

உலகப் புகழ் பெற்ற காதல் நினைவுச் சின்னமான தாஜ்மஹாலுக்கு இந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலா தலங்களின் பட்டியலில் தனி இடம் உண்டு. மேலும் இந்தியாவின் ஒரு முக்கியமான சுற்றுளாதளமான தாஜ்மஹாலுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகை தருகின்றன.

இந்நிலையில் உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு இன்று ஒருநாள் தாஜ்மஹாலுக்குள் நுழைய அனுமதி இலவசம் என இந்திய தொல்லியல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One day entry to Taj Mahal is free today


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->