#BigBreaking || நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்., சற்றுமுன் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பாதிப்பில், இந்தியாவைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 250 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இரண்டாவதாக தலைநகர் டெல்லியில் 64 பேர் ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஒமைக்ரான் குறித்து மத்திய அரசு எச்சரித்துள்ளது. அறிவியல் ஆதாரத்தின்படி டெல்டா வகையைக் காட்டிலும் ஒமைக்ரான் வகை மூன்று மடங்கு அதிகம் பரவக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தலைநகர் டெல்லியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹரியாணா மாநிலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் வங்கி, வணிக வளாகம், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு வர தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் முதல் ஊரடங்கு அறிவிப்பாக, மத்தியப் பிரதேசத்தில் இரவு 11 முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக, அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், உத்திரப் பிரதேசத்தில் நாளை முதல் இரவு 11 முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக, அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OMICRON ISSUE NIGHT TIME LOCKDOWN IN UTTAR PRADESH


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->