இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிப்பு., சற்றுமுன் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவி கொண்டு இருக்கிறது. நாட்டில் முதல் பாதிப்பு, கர்நாடக மாநிலம் பெங்களூர் மருத்துவர் உள்பட 2 பேருக்கு கண்டறியப்பட்டது. 

அதனை தொடர்ந்து, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா, ஆந்திரா, சண்டிகர், தெலுங்கானா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. 

ஒட்டுமொத்தமாக பார்த்தால் மகாராஷ்டிரா, டெல்லி மாநிலத்தில் அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் மைக்ரோன் பாதிப்பு 200 ஐ தொட்டுவிட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சற்றுமுன்பு தகவல் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 54 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தலைநகர் டெல்லியில் 54 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேபோல் கர்நாடக மாநிலத்தில் 19 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக 200 பேருக்கு மைக்ரான் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் எழுபத்தி ஏழு பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Omicron 200 case in India


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->