சுட்டெரிக்கும் வெயில்.. நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை - மாநில அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் தற்போது பெரும்பாலான மாநிலங்களில் வெயில் காலம் தொடங்கிய நிலையில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக அம்மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் அடுத்த சில நாட்களுக்கு பல மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு மாநிலங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

அந்த வகையில் ஒடிசா, மேற்குவங்கம், குஜராத், தெலுங்கானா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெப்ப அலை வீசி வருகிறது. 

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் கடுமையான வெப்பம் நிலவி வருவதால், நாளை முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் வழக்கமாக மே மாதம் முதல் வாரத்தில் கோடை விடுமுறை அறிவிக்கப்படும் நிலையில், தற்போது வெயிலின் தாக்கம் காரணமாக முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Odisha school summer holidays starts from tomorrow


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->