விண்வெளி மையம் நடத்திய தேர்வில் ஆள்மாறாட்டம் - வடமாநில வாலிபர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


விண்வெளி மையம் நடத்திய தேர்வில் ஆள்மாறாட்டம் - வடமாநில வாலிபர்கள் கைது.!

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியாற்றுவதற்கும், தொழில் நுட்ப பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கும் கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் நகரில் 10 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை இந்திய விண்வெளி ஆய்வு மையம் நடத்தியுள்ளது. 

இந்தத் தேர்வு மையங்களில் தேர்வு எழுத வேண்டியவர்களுக்கு பதிலாக வேறு நபர்கள் கலந்து கொண்டதும், அவர்கள், மொபைல் போன் வழியே புகைப்படங்களை எடுத்து, கேள்விகளை வேறொருவருக்கு அனுப்பி, புளூடூத் வழியே பதில்களை பெற்று வந்ததும் தெரிய வந்தது. 

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இதுபோன்று வெவ்வேறு தேர்வு மையங்களில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் பிடிபட்டனர். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் அணைத்து தேர்வு மையங்களிலும் விசாரணை நடத்தியதில், வடமாநில நபர்கள் 4 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்கள் மீது ஐ.டி. சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

north state youths arrested for Impersonation in kerala


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->